லைஃப்ஸ்டைல்
காளான் கிரீம் சூப்

நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் காளான் கிரீம் சூப்

Published On 2020-08-26 05:40 GMT   |   Update On 2020-08-26 05:40 GMT
பருவநிலை மாற்றங்களுக்கு ஏதுவாக நாவிற்கு இதமளித்து நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் சூப் வகைகள் பருகலாம். இன்று காளான் கிரீம் சூப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

காளான் - 200 கிராம்
பெ.வெங்காயம் - 1
பூண்டு - 10 பல்
பிரிஞ்சி இலை - சிறிதளவு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு, வெண்ணெய் - தேவைக்கு
மைதா - 4 டீஸ்பூன்
பால் - கால் லிட்டர்
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

காளான், பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு வெண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் மைதா மாவை கொட்டி வறுக்கவும்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பாலை ஊற்றி கட்டி பிடிக்காமல் கிளறிவிட்டு கொதிக்க விடவும்.

அது கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து கிரீம் பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.

அது வதங்கியதும் பிரிஞ்சி இலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.

பிறகு காளானை சேர்த்து கிளறவும்.

அது வெந்ததும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்க தொடங்கியதும் கிரீம், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும்.

அடுத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ருசிக்கலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News