செய்திகள்
தேவகோட்டை அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேவகோட்டை அருகே நாம் தமிழர்கட்சி வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய தலைவர் நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேவகோட்டை:
மத்திய அரசு விவசாயிகளுக்கும், இந்திய மக்களுக்கும் எதிராக கொண்டுவந்த வேளாண்மை திருத்த சட்டத்தை நீக்கக்கோரி தேவகோட்டை புளியாளில் நாம் தமிழர்கட்சி வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய தலைவர் நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் சீமான் குணா, காரைக்குடி பாசறை துணை செயலாளர் சின்னப்பன், அருள்பணி அற்புதராஜ், துணை தலைவர் ஆரோக்கியசாமி, ஒன்றிய செயலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெரியசாமி, பிரேம்குமார், மலர்வேந்தன், வினோத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.