செய்திகள்
உத்திரமேரூர் அருகே கத்திமுனையில் மூதாட்டியிடம் நகை கொள்ளை
உத்திரமேரூர் அருகே கத்திமுனையில் மூதாட்டியிடம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் பேரூராட்சி செங்குந்தர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோட்டம்மாள் (வயது 75). இவருக்கு சொந்தமான வீட்டில் அவர் தனியாக வசித்து வந்த நிலையில், வீடு வாடகைக்கு விடப்படும் என்று பலகை வைத்துள்ளார். நேற்று மதியம் மர்ம நபர் ஒருவர் கோட்டம்மாளிடம் வீடு பார்க்க வந்துள்ளதாக கூறியுள்ளார்.
அதனை நம்பிய கோட்டம்மாள் வீட்டைகாண்பிக்க அவரைஉள்ளே அழைத்து சென்றபோது, கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த நபர் அவரிடம் இருந்த 5 பவுன் மதிப்புள்ள தங்க வளையல் மற்றும் சங்கிலியை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து உத்திரமேரூர் போலீஸ்நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.