செய்திகள்
சென்னையில் 2 நாள் கோவாக்சின் தடுப்பூசி சிறப்பு முகாமை அறிவித்தது மாநகராட்சி
கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டதால், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் நாளை, நாளை மறுநாள் கோவாக்சின் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்.... தமிழகத்துக்கு அடுத்த மாதம் 71 லட்சம் தடுப்பூசி வருகிறது- ராதாகிருஷ்ணன் தகவல்
இதுவரை 59 ஆயிரம் பேர் காலம் கடந்தும் 2ஆம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொள்ளவில்லை. இதனால் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.