செய்திகள்
ரேஷன் அரிசி

இண்டூர், நல்லம்பள்ளி பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2021-09-07 07:24 GMT   |   Update On 2021-09-07 07:24 GMT
இண்டூர், நல்லம்பள்ளி பகுதிகளில் ரேஷன் அரிசியை பதுக்கியவர்கள் யார்? என்பது குறித்து மாவட்ட வழங்கல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே தாளப்பள்ளம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் அந்த பகுதியில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஒரு கொட்டகையில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதேபோல் பாகலஅள்ளி பகுதியில் நடந்த சோதனையில் ஒரு குடிசையில் ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை குழுவினர் 2 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

இந்த அரிசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசியை பதுக்கியவர்கள் யார்? என்பது குறித்து மாவட்ட வழங்கல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News