செய்திகள்
கே.எஸ் அழகிரி

குஷ்பு பாஜகவுக்கு செல்வதால் காங்கிரசுக்கு இழப்பு இல்லை - கே.எஸ் அழகிரி

Published On 2020-10-12 07:02 GMT   |   Update On 2020-10-12 07:02 GMT
நடிகை குஷ்பு பாஜகவுக்கு செல்வதால் காங்கிரஸ் கட்சிக்கு இழப்பு இல்லை என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:

குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அதேசமயம், சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ள குஷ்பு, காங்கிரஸ் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாஜக-வில் நடிகை குஷ்பு இணைவதால் காங்கிரசுக்கு இழப்பு இல்லை என்றும் அவரை நடிகையாக தான் காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்தார்களே தவிர தலைவராக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் குஷ்புவுக்காக பாஜக காத்திருக்கவில்லை என்றும் அவர்தான் சென்று காத்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News