செய்திகள்
வாய்ப்பு கொடுத்தால் தொடக்க வீரராக களம் இறங்க தயார்: கேகேஆர் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மான் கில்
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர் வாய்ப்பு கொடுக்கப்பட்டால், தயாராக ஏற்றுக் கொள்வேன் என ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு அடுத்ததாக இளம் தலைமுறையில் ஷுப்மான் கில் சிறந்த வீரராக வருவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் சிறப்பாக விளையாடி அசத்தினார்.
இதனால் கேகேஆர் அணி ஷுப்மான் கில்லை ஏலம் ஏலம் எடுத்தது. எந்தவொரு பந்து வீச்சாளரின் பந்தையும் தயங்காமல் எதிர்கொள்ளும் திறமையுள்ள ஷுப்மான் கில்லுக்கு கடந்த ஐபிஎல் சீசனில் போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பெரும்பாலான ஆட்டங்களில் பின்வரிசையில்தான் களம் இறங்கினார். இந்த முறை அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் தொடக்க பேட்ஸ்மேன் வாய்ப்பு கிடைத்தால், களம் இறங்க தயார் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கொடுக்கப்பட்டால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு தொடக்க வீரராக களம் இறங்குவேன். நான் பேட்டிங் செய்ய களம் இறங்கும்போது அந்த சூழ்நிலையில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் மனதில் இருக்கும்.
அதனால் பேட்டிங் செய்ய வரும்போது இப்படி செயல்பட வேண்டும் என்று நினைப்பதில்லை. என்னுடைய மனதில் எந்த அணியில் விளையாடினாலும், அணிக்காக போட்டியை ஜெயித்து கொடுக்க வேண்டும் என்பதுதான் இருக்கும்.’’ என்றார்.0