செய்திகள்
கோப்பு படம்

திருவாடானை அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 65 பவுன்-பணம் கொள்ளை

Published On 2019-11-18 12:19 GMT   |   Update On 2019-11-18 12:19 GMT
திருவாடானை அருகே பூட்டிய வீட்டின் ஜன்னலை உடைத்து 65 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

திருவாடானை அருகே உள்ள பெருவாக்கோட்டையைச் சேர்ந்தவர் சாரதா (வயது55) இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு மதுரையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து முற்றத்தில் இருந்த ஜன்னலை உடைத்தனர். பின்னர் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்து 65 பவுன் நகை, 800 கிராம் வெள்ளி, ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடினர்.

அப்போது வீட்டில் இருந்து சத்தம் கேட்டதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதை அறிந்த கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் தப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருவாடானை போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடம் வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News