செய்திகள்
கோப்புபடம்

கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-12-22 11:36 GMT   |   Update On 2020-12-22 11:36 GMT
தேனி அருகே கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி:

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், சமையல் கியாஸ் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் முனீஸ்வரன், தாலுகா குழு உறுப்பினர் காமுத்துரை மற்றும் பலர் கலந்துகொண்டு. கியாஸ் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Tags:    

Similar News