செய்திகள்
கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர் உயிரிழப்பு

Published On 2021-03-03 09:35 GMT   |   Update On 2021-03-03 09:35 GMT
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 15 நிமிடத்தில் 45 வயதானவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பீவாண்டியை சேர்ந்தவர் சுக்தேவ். 45 வயதான இவர் கொரோனா தடுப்பூசி 2-வது டோசை போட்டுக்கொண்டார்.

தடுப்பு மருந்து செலுத்திய 15 நிமிடத்தில் அவர் உயிர் இழந்தார். அவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News