செய்திகள்
மத்திய உள்துறை மந்திரி அமித் ‌ஷா

காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய குழு சம்பளம்

Published On 2019-10-22 21:03 GMT   |   Update On 2019-10-22 21:03 GMT
காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கும் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரை செய்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுடெல்லி:

காஷ்மீர் மாநிலம், வருகிற 31-ந் தேதியில் இருந்து, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்றும், லடாக் யூனியன் பிரதேசம் என்றும் பிரிக்கப்படுகிறது. இதையொட்டி, 31-ந் தேதியில் இருந்து, இரு யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கும் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரை செய்த சம்பளமும், இதர படிகளும் வழங்கப்படும்.

இதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இதனால், 4 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் பலன் அடைவார்கள். இதர படிகளுக்கு மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரத்து 800 கோடி செலவாகும் என்று தெரிகிறது.
Tags:    

Similar News