செய்திகள்
திருவள்ளூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
திருவள்ளூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (வயது 49). இவர் மணவாளநகர் பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் முகமது அலி தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை கடையின் வெளியில் நிறுத்தி விட்டு தூங்கிகொண்டிருந்தார். நேற்று காலை பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. திருட்டு போனது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிளை திருடியது சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபு (வயது 28) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றி முகமது அலியிடம் ஒப்படைத்தனர்.