செய்திகள்
திருமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
திருமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகன் யுவன்சரண் (வயது 8). இவன் நேற்று அங்குள்ள மந்தை திடலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்குள்ள ஹைமாஸ் மின் கம்பத்தை தொட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட யுவன்சரண் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.