செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாத 222 பேர் மீது வழக்கு

Published On 2020-11-18 08:20 GMT   |   Update On 2020-11-18 08:20 GMT
நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 222 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போலீசார் முககவசம் அணியாமல் சுற்றித்திரியும் நபர்கள் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 222 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர்களிடமிருந்து ரூ.44 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதேப் போல் பொது இடங்களில் எச்சில் துப்பிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூ.1,000அபராதம் வசூல் செய்தனர்.
Tags:    

Similar News