செய்திகள்
ரிஷப் பண்ட், கேஎல் ராகுல்

முதல் ஒருநாள் கிரிக்கெட்: ரிஷப் பண்ட்-க்குப் பதில் விக்கெட் கீப்பர் பணி செய்யும் கேஎல் ராகுல்

Published On 2020-01-14 13:29 GMT   |   Update On 2020-01-14 13:29 GMT
பேட் கம்மின்ஸின் பவுன்சர் ரிஷப் பண்டின் ஹெல்மெட்டை தாக்கியதால் மூளையதிர்ச்சி காரணமாக விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 44-வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுன்சராக வீசினார். ரிஷப் பண்ட் அதை லெக் சைடு தூக்கி அடிக்க முயன்றார்.

பந்து பேட்டின் விளிம்பில் பட்டு ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதனால் ரிஷப் பண்ட் அதிர்ச்சிக்குள்ளானார். இந்திய அணி டாக்டர் அவரை பரிசோதித்ததில் மூளையதிர்ச்சி அடைந்திருப்பதாக தெரியவந்தது.

இதனால் ரிஷப் பண்ட் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்குப் பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை செய்து வருகிறார். டாக்டர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News