ஆன்மிகம்
ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் ஸ்ரீசூக்த அஷ்ட லட்சுமி ஹோமம்
தங்கக்கோவில் பிரதிஷ்டை செய்து 14-வது ஆண்டு விழாவையொட்டி கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை ஆகியவை நடந்தது.அதில் சக்தி அம்மா பங்கேற்று தலைமை தாங்கி யாகத்தை நடத்தினார்.
வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தங்கக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்கக்கோவில் பிரதிஷ்டை செய்து 14-வது ஆண்டு விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 6.30 மணியில் இருந்து காலை 7 மணிவரை கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை ஆகியவை நடந்தது.
அதைத்தொடர்ந்து காலை 7 மணியில் இருந்து காலை 10 மணிவரை ஸ்ரீமகாலட்சுமி மூல மந்திர ஹோமம், ஸ்ரீசூக்த அஷ்ட லட்சுமி ஹோமம் நடந்தது. அதில் சக்தி அம்மா பங்கேற்று தலைமை தாங்கி யாகத்தை நடத்தினார். அப்போது மகா ஆரத்தி நடந்தது. ஸ்ரீலட்சுமிநாராயணிக்கு சக்தி அம்மா மகா அபிஷேகம், சிறப்புப்பூஜைகள் ஆகியவற்றை செய்தார். பின்னர் பக்தர்களுக்கு சக்தி அம்மா ஆசி வழங்கினார்.
மேற்கண்ட நிகழ்ச்சியில் தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ், நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, அறங்காவலர் சவுந்தரராஜன், மேலாளர் சம்பத் மற்றும் பக்தர்கள் சமூக விலகலை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர். முன்னதாக பக்தர்கள் ஊர்வலமாக வந்து சக்தி அம்மாவுக்கு சீர்வரிசை அளித்தனர்.
அதைத்தொடர்ந்து காலை 7 மணியில் இருந்து காலை 10 மணிவரை ஸ்ரீமகாலட்சுமி மூல மந்திர ஹோமம், ஸ்ரீசூக்த அஷ்ட லட்சுமி ஹோமம் நடந்தது. அதில் சக்தி அம்மா பங்கேற்று தலைமை தாங்கி யாகத்தை நடத்தினார். அப்போது மகா ஆரத்தி நடந்தது. ஸ்ரீலட்சுமிநாராயணிக்கு சக்தி அம்மா மகா அபிஷேகம், சிறப்புப்பூஜைகள் ஆகியவற்றை செய்தார். பின்னர் பக்தர்களுக்கு சக்தி அம்மா ஆசி வழங்கினார்.
மேற்கண்ட நிகழ்ச்சியில் தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ், நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, அறங்காவலர் சவுந்தரராஜன், மேலாளர் சம்பத் மற்றும் பக்தர்கள் சமூக விலகலை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர். முன்னதாக பக்தர்கள் ஊர்வலமாக வந்து சக்தி அம்மாவுக்கு சீர்வரிசை அளித்தனர்.