செய்திகள்
ரேஷன் அரிசி

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2021-09-07 17:48 GMT   |   Update On 2021-09-07 17:48 GMT
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆனேக்கல்-தேன்கனிக்கோட்டை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஜவளகிரி அருகே சென்ற சரக்கு வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில், 2 டன் ரேஷன் அரிசி கர்நாடகாவுக்கு கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக கர்நாடக மாநிலம், ராம்நகர், கடுசிவனஅள்ளி பகுதியை சேர்ந்த குமார் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். சரக்கு வேன், ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் சரக்கு வேனில் கர்நாடகாவுக்கு கடத்திய 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கோபி (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News