செய்திகள்
லங்கா பிரிமீயர் லீக்

லங்கா பிரிமீயர் லீக்கின் புதிய தேதி அறிவிப்பு

Published On 2020-09-03 10:09 GMT   |   Update On 2020-09-03 10:09 GMT
கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட லங்கா பிரிமீயர் லீக்கின் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ ஐபிஎல் டி20 லீக் போட்டியை நடத்துவது போல் இலங்கை கிரிக்கெட் போர்டும் லங்கா பிரிமீயர் லீக் என்ற பெயரில் டி20 தொடரை நடத்த ஏற்பாடு செய்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்தி்வைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்டு 28-ந்தேதி தொடங்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் போர்டு தெரிவித்தது. ஆனால் வெளிநாட்டு வீரர்களை 14 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் தொடர் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நவம்பர் மாதம் 14-ந்தேதி முதல் டிசம்பர் 6-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து அணிகள் 23 போட்டிகளில் வி்ளையாட உள்ளது.

கொழும்பு, கண்டி, காலோ, தம்புல்லா, ஜாஃப்னா ஆகிய ஐந்து நகரங்களை மையமாக கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News