ஆன்மிகம்
பஞ்சவடி கோவிலில் ராமநவமி உற்சவம்

பஞ்சவடி கோவிலில் ராமநவமி உற்சவம்

Published On 2021-04-23 06:12 GMT   |   Update On 2021-04-23 06:12 GMT
புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ராமச்சந்திர மூர்த்திக்கு பாலாபிஷேகமும், வாசனை திரவியங்களுடன் சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது.
புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி சன்னதியில் ராமநவமி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு ராமச்சந்திர மூர்த்திக்கு பாலாபிஷேகமும், வாசனை திரவியங்களுடன் சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது.

மாலை 5 மணிக்கு ராமச்சந்திர மூர்த்திக்கும், சீதாவுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News