செய்திகள்
கோப்புபடம்

ஆயுத பூஜைக்காக பூத்துக் குலுங்கும் கோழிக் கொண்டை பூக்கள்

Published On 2021-10-09 08:02 GMT   |   Update On 2021-10-09 08:02 GMT
முத்தூர் அருகே உள்ள மேட்டாங்காட்டுவலசு சுற்றுவட்டார விவசாயிகள் ஆயுத பூஜை விற்பனைக்காக செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் அதிகளவு சாகுபடி செய்து உள்ளனர்.
திருப்பூர்:
 
திருப்பூர்  மாவட்டம்  முத்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விவசாயம் பிரதானமாகும். பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு ஆண்டு தோறும் ஜனவரி, ஆகஸ்டு மாதங்களில் இரு பிரிவுகளாக திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல், மஞ்சள், கரும்பு, வாழை மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் முத்தூர் அருகே உள்ள மேட்டாங்காட்டுவலசு சுற்றுவட்டார விவசாயிகள் ஆயுதபூஜை விற்பனைக்காக செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் அதிகளவு சாகுபடி செய்து உள்ளனர்.ஆயுத பூஜை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது:

ஒரு ஏக்கர் பரப்பளவில் செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் சாகுபடி செய்ய உழவு கூலி, பார் கட்டுதல், நாற்று நடுதல், களை மேலாண்மை, உர மேலாண்மை கடைபிடித்தல் என 2 சாகுபடிக்கும் சேர்த்து ரூ.30 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளோம். 

செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் தற்போது நன்கு வளர்ந்து பூத்து குலுங்குகின்றன. பூக்களை ஆயுத பூஜைக்கு 4 நாட்களுக்கு முன்பு பறித்து திருப்பூர், கோவை ஈரோடு, கரூர், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, சேலம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து விடுவோம். மேலும் இந்த பகுதிகளில் ஆயுதபூஜை நாளில் விற்பனை செய்வோம் என்றார். 
Tags:    

Similar News