ஆன்மிகம்
நடராஜர்

திருவெம்பாவை நோன்பு

Published On 2019-12-19 01:34 GMT   |   Update On 2019-12-19 01:34 GMT
மார்கழியில் வரும் திருவாதிரைக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு திருவாதிரை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது
மார்கழியில் வரும் திருவாதிரைக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு திருவாதிரை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது திருவாதிரையோடு சேர்த்து விரத நாட்கள் மொத்தம் பத்து நாட்கள் ஆகும். இந்த நோன்பில் அதிகாலையில் எழுந்து நீராடி சிவகாமியுடன் கூடிய நடராஜரை வழிபடுவார்கள்.

இவ்விரதத்தின்போது அவித்த உணவினை ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார்கள். இந்த விரதத்தைப் பெரும்பாலும் கன்னிப் பெண்கள்தான் கடைப்பிடிப்பர். இந்த விரதம் மேற்கொள்ளும்போது, திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன.

இவ்வழிபாட்டில் (புட்டு) படைக்கப் படுகிறது. இதனால் இவ்வழிபாடு ‘பிட்டு வழிபாடு’ என்று அழைக்கப்படுகிறது.
Tags:    

Similar News