செய்திகள்
மதுரையில் 22¼ கிலோ கஞ்சா-பணம் பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது
மதுரையில் 22¼ கிலோ கஞ்சா மற்றும் ரூ.32 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்த போலீசார் 3 வாலிபர்களை கைது செய்தனர்.
மதுரை:
மதுரை நகரில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன்படி தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் கீழ்மதுரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 வாலிபர்களை போலீசார் மறித்தனர். உடனே ஒரு வாலிபர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார். உஷாராண போலீசார் மற்ற 2 பேரையும் பிடித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த பெரியண்ண குமார் (28), அண்ணாநகர் பார்வதி வீதியைச் சேர்ந்த வெற்றிவேல் முருகன் (25) என தெரியவந்தது.
இவர்கள் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற 21 கிலோ கஞ்சா மற்றும் ரூ.32 ஆயிரம் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேரையும் கைது செய்த போலீசார் தப்பி ஓடிய பிரேம்குமார் என்பரை தேடி வருகின்றனர்.
அண்ணாநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்கு கஞ்சா விற்ற சொக்கிக்குளத்தைச் சேர்ந்த வசந்தகுமார் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை நகரில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன்படி தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் கீழ்மதுரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 வாலிபர்களை போலீசார் மறித்தனர். உடனே ஒரு வாலிபர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார். உஷாராண போலீசார் மற்ற 2 பேரையும் பிடித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த பெரியண்ண குமார் (28), அண்ணாநகர் பார்வதி வீதியைச் சேர்ந்த வெற்றிவேல் முருகன் (25) என தெரியவந்தது.
இவர்கள் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற 21 கிலோ கஞ்சா மற்றும் ரூ.32 ஆயிரம் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேரையும் கைது செய்த போலீசார் தப்பி ஓடிய பிரேம்குமார் என்பரை தேடி வருகின்றனர்.
அண்ணாநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்கு கஞ்சா விற்ற சொக்கிக்குளத்தைச் சேர்ந்த வசந்தகுமார் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.