ஆன்மிகம்
ஜெனகை மாரியம்மன்

ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-07-31 08:35 GMT   |   Update On 2021-07-31 08:35 GMT
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சன உள்பட 21 அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் அலங்காரம் நடைபெற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சன உள்பட 21 அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் அலங்காரம் நடைபெற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல் தென்கரைஅகிலாண்டேஸ்வரி அம்மன்கோவில், திருவேடகம் ஏலவார் குழலிஅம்மன்கோவில்களில் ஆடிவெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுப்பெருமாள் நகர் அய்யப்பன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News