தொழில்நுட்பம்
கூகுள் க்ரோம்

ஆண்ட்ராய்டு பயனர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க செய்யும் கூகுள் அம்சம்

Published On 2020-05-30 08:05 GMT   |   Update On 2020-05-30 08:05 GMT
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க செய்ய புதிய கூகுள் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க புதிய வழிமுறையினை கூகுள் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதை கொண்டு மக்கள் பொது வெளியில் செல்லும் போது சமூக இடைவெளியை மீறுகிறோமா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

கூகுள் நிறுவனத்தின் புதிய அம்சம் சோடார் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பயனரின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கேமராக்களில் ஒன்றிணைந்து இயங்குகிறது. இந்த அம்சத்தினை இயக்கியதும், பயனர்களை இது வட்டத்தில் நிறுத்துகிறது.



போக்கிமான் கோ போன்ற கேமினை போன்றே புதிய அம்சமும் இயங்குகிறது. சமூக இடைவெளிக்கென பரிந்துரைக்கப்பட்ட அளவினை இது ஸ்மார்ட்போனின் திரையில் காண்பிக்கிறது. தெருக்களில் நடந்து செல்லும் போது, ஸ்மார்ட்போனை முன்புறம் காண்பிக்க வேண்டும்.

ஸ்மார்ட்போனினை நடுவில் வைத்துக் கொண்டு நடக்கும் போது, அவர்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் திரையில் அதற்கான எச்சரிக்கை தகவல் தெரியும். இவ்வாறு பொதுவெளியில் செல்லும் போது சமூக இடைவெளியினை மிக துல்லியமாக கடைப்பிடிக்க முடியும்.

சோடார் அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான கூகுள் குரோம் பிரவுசர்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் சீராக இயங்க ஸ்மார்ட்போனில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி இருக்க வேண்டும். இதற்கென வெப் எக்ஸ்ஆர் எனும் தொழில்நுட்பத்தை கொண்டு 2 மீட்டர் சமூக இடைவெளியை கணக்கிட்டு தெரிவிக்கிறது.
Tags:    

Similar News