செய்திகள்
கொரோனா வைரஸ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 பேருக்கு கொரோனா: 5 பேர் பலி

Published On 2021-06-16 13:25 GMT   |   Update On 2021-06-16 13:25 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 18 ஆயிரத்து 979 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 18 ஆயிரத்து 979 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை முடிந்து 81 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 17 ஆயிரத்து 682 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 983 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 314 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News