வழிபாடு
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நாளை நடக்கிறது
திண்டிவனம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
திண்டிவனம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. மத்திய திருப்பதி சன்னதியில் ஸ்ரீவாரி வெங்கடாசலபதி அருள்பாலிக்கிறார். இங்கு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி ஸ்ரீவாரி வெங்கடாசலபதி சாமிக்கு இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு திருமஞ்சனம் தீபாராதனை நடக்கிறது.
நாளை அதிகாலை, 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில், பரமபத வாசல் வழியே உற்சவர் சீனிவாச பெருமாள் எழுந்தருளுகிறார். இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவரும், நிர்வாக அறங்காவலருமான ஆ.கோதண்டராமன், துணைத்தலைவர் யுவராஜன், செயலாளர் நரசிம்மன், அறங்காவலர்கள் பழனியப்பன், கச்சபேஸ்வரன், செல்வம், வெங்கட்ராமன், ஆலய நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.
நாளை அதிகாலை, 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில், பரமபத வாசல் வழியே உற்சவர் சீனிவாச பெருமாள் எழுந்தருளுகிறார். இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவரும், நிர்வாக அறங்காவலருமான ஆ.கோதண்டராமன், துணைத்தலைவர் யுவராஜன், செயலாளர் நரசிம்மன், அறங்காவலர்கள் பழனியப்பன், கச்சபேஸ்வரன், செல்வம், வெங்கட்ராமன், ஆலய நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.