செய்திகள்
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
வானிலை குறித்து இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்றும் நாளையும் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலையானது இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை குமரிக்கடல் பகுதியில் உருவாக உள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
வானிலை குறித்து இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்றும் நாளையும் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலையானது இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை குமரிக்கடல் பகுதியில் உருவாக உள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.