செய்திகள்
விபத்து

விக்கிரவாண்டி அருகே கார் மோதி விவசாயி பலி

Published On 2021-02-27 13:21 GMT   |   Update On 2021-02-27 13:21 GMT
விக்கிரவாண்டி அருகே சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது கார் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே உள்ள பெரியதச்சூர் இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் மண்ணாங்கட்டி (வயது 60). இவர், நேற்று காலை தனது, நிலத்தில் விளைந்த தானியங்களை விற்பனை செய்ய விக்கிரவாண்டியில் உள்ள கமிட்டிக்கு வந்தார். பின்னர், உணவு சாப்பிடுவதற்காக கமிட்டியில் இருந்து விக்கிரவாண்டி கடைவீதிக்கு செல்ல புறவழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் மண்ணாங்கட்டி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News