லைஃப்ஸ்டைல்
கர்ப்ப காலத்தில் எப்பொழுது பயணம் செய்யலாம்

கர்ப்ப காலத்தில் எப்பொழுது பயணம் செய்யலாம்

Published On 2019-11-21 03:31 GMT   |   Update On 2019-11-21 03:31 GMT
கர்ப்பிணிகள் எந்த காலகட்டங்களில் பயணம் செய்யலாம், செய்யக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு அளிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
கர்ப்பம் தரித்த பெண்களுக்கு, நின்றால் குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிடுமோ? நடந்தால், வேலை செய்தால், பொருட்களை தூக்கினால் குழந்தைக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்திடுமோ என ஒவ்வொரு செயல் செய்கையிலும் ஒருவித பயம் இருக்கும். இதில் கர்ப்ப காலத்தில் பயணம் என்றால், அவ்வளவு தான்; கர்ப்பிணிகள் கொள்ளும் பயத்திற்கு அளவே இல்லை. கர்ப்பிணிகளின் பயத்தை போக்கி, அவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

1. முதல் 3 மாதகாலம்..

நீங்கள் முதல் 3 மாத காலத்திலும் பயணம் செய்யலாம். ஆனால், இச்சமயத்தில் மூக்கடைப்பு, அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும் உணர்வு போன்றவை ஏற்பட்டு, பயணத்தின் சுவாரசியத்தன்மையை கெடுத்துவிடும். மேலும் இந்த காலத்தில் பயணம் செய்வது கருக்கலைப்பு நிகழ்வதற்கான சாத்தியக் கூறினை அதிகரிக்கும்.

2. இரண்டாவது 3 மாதகாலம்..

இந்த காலகட்டம் பயணம் செய்ய உகந்ததே., ஆனால், நீங்கள் கீழே விழுந்துவிடாமல், வயிற்றின் மீது அழுத்தம் ஏற்பட்டுவிடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. மூன்றாவது 3 மாதகாலம்..

இந்த சமயத்தில் பயணத்தை தவிர்ப்பது நல்லது; ஏனெனில் எப்பொழுது வேண்டுமானாலும் குழந்தை பிறப்பின் நிலை மாறலாம். அதனால், மருத்துவர் மற்றும் மருத்துவமனைக்கு அருகிலேயே இருக்கும் வகையில், வீட்டில் இருப்பது நல்லது.

1. மருத்துவரிடம் உங்கள் பயண விபரம் பற்றி தெரிவித்து, கலந்தாலோசித்த பின், அவர் பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்தால், நீங்கள் பயணத்தில் ஈடுபடலாம்.

2. நீங்கள் பயணம் மேற்கொள்ளப்போவது காரிலோ அல்லது விமானத்திலோ என்றால், செல்லலாம்; இரயில் மற்றும் பேருந்து பயணத்தில் ஏற்படும் குலுங்கல்கள் குழந்தைக்கு நல்லதல்ல.

3. நீங்கள் உங்களுக்கு இன்சூரன்ஸ் செய்தபின் பயணம் மேற்கொள்வது, அசம்பாவிதம் ஏதேனும் நடந்தாலும், உங்கள் பொருளாதார தேவைக்கு உறுதுணையாக இருக்கும்.

4. உங்கள் கர்ப்ப நிலை குறித்த மருந்துகள், மருத்துவ அறிக்கைகள் இருந்தால், பயணம் செய்யலாம்.

இந்நிகழ்வுகளின் போதெல்லாம் நீங்கள் பயணம் செய்யலாகாது..,

1. உங்களுக்கு உதிரப்போக்கு இருக்கும் போது,

2. தலைவலி இருக்கும் போது,

3. வயிற்றில் வலி ஏற்படும் போது,

4. கண் பார்வையில் குறைபாடு இருப்பதாய் தோன்றும் போது என இந்த சூழ்நிலைகள் நிகழும் போது, பயணம் செய்வதை அறவே தவிர்க்கவும்; இல்லையேல் இது குழந்தையின் அழிவிற்கு காரணமாக அமையும்..!
Tags:    

Similar News