செய்திகள்
தற்கொலை

குளித்தலை அருகே அங்கன்வாடி பெண் சமையல் உதவியாளர் தற்கொலை

Published On 2020-09-27 13:55 GMT   |   Update On 2020-09-27 13:55 GMT
குளித்தலை அருகே அங்கன்வாடி சமையல் உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி சேடர் தெருவை சேர்ந்தவர் கோமதி (வயது 32). இவர் அப்பகுதியிலுள்ள ஒருவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். இவரது கணவர் வெங்கடேஷ்குமார் என்பவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு சக்கரேஷ்வர் (12) என்ற மகன் உள்ளான். கோமதி குளித்தலை அருகே மேட்டு மருதூர் கிராமத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கோமதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது வீட்டின் அருகில் இருந்தவர்கள், கீழஊத்தாம்பட்டி என்ற ஊரில் வசித்து வரும் கோமதியின் தாயார் முத்துவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தனது மகளின் வீட்டிற்கு வந்த முத்து, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தார். அப்போது சேலையால் தூக்கிட்ட நிலையில் கோமதி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோமதியின் தாய் முத்து குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமதி இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News