ஆன்மிகம்
தேவிப்பட்டினத்தில் கடலுக்குள் பக்தர்கள் உள்ளே செல்லாமல் இருக்க தடுப்பு கம்புகள் கட்டப்பட்டுள்ளதையும் காணலாம்.

பக்தர்கள் செல்ல தடை எதிரொலி: தேவிபட்டினம் நவபாஷாண கோவில் அடைப்பு

Published On 2021-04-29 04:43 GMT   |   Update On 2021-04-29 04:43 GMT
அரசின் உத்தரவை தொடர்ந்து தேவிப்பட்டினத்தில் கடலுக்குள் அமைந்துள்ள நவபாஷாணத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் கோவில் அடைக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. இதனிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டது. அரசின் தடையை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவிலின் நான்கு திசைகளிலும் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் கடலுக்குள் அமைந்துள்ள ராமபிரான் பூஜை செய்து வழிபாடு நடத்திய நவபாஷாணம் பகுதிக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் அங்கு தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நவ பாஷாணதிற்குள் செல்ல பக்தர்கள் விதிக்கப்பட்ட தடை காரணமாக தேவிபட்டினம் நவபாஷாணம் அமைந்துள்ள கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. பக்தர்கள் செல்ல தடை காரணமாக தேவிபட்டினம் கடலில் அமைந்துள்ள நவபாஷாண கோவிலுக்கு செல்ல முடியாததால் பூஜை செய்ய வரும் பக்தர்களும் நவபாஷாண பகுதிக்குள் செல்ல முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் தினமும் கோவில் திறக்கப்பட்டு வழக்கமாக நடைபெறும் 6 கால பூஜைகள் எந்த ஒரு தடையும் இன்றி நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
=----------------------
Tags:    

Similar News