ஆன்மிகம்
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் வருசாபிஷேகம்
பாளையங்கோட்டையில் வேதநாராயணன்-அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் வருசாபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டையில் வேதநாராயணன்-அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை வருசாபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு புண்யாகவாசனம், சுதர்சன ஹோமம் உள்ளிட்டவைகள் நடந்தன.
தொடர்ந்து வருண காயத்ரி ஹோமம், திருமஞ்சனம் நடந்தது. பின்னர் வேதநாராயணன், அழகிய மன்னார் ராஜகோபால சுவாமிகளுக்கு வருசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
இரவு ராஜகோபால சுவாமி, அழகிய மன்னார் கருடவாகனத்திலும், தாயார் அன்னவாகனத்திலும், கிருஷ்ணர் தோளுக்கினியான் வாகனத்திலும் எழுந்தருளினர். பின்னர் வீதி உலா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வருண காயத்ரி ஹோமம், திருமஞ்சனம் நடந்தது. பின்னர் வேதநாராயணன், அழகிய மன்னார் ராஜகோபால சுவாமிகளுக்கு வருசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
இரவு ராஜகோபால சுவாமி, அழகிய மன்னார் கருடவாகனத்திலும், தாயார் அன்னவாகனத்திலும், கிருஷ்ணர் தோளுக்கினியான் வாகனத்திலும் எழுந்தருளினர். பின்னர் வீதி உலா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.