செய்திகள்
கோப்புப்படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-04-05 02:29 GMT   |   Update On 2021-04-05 02:29 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 14 ஆக உயர்ந்தது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 14 ஆக உயர்ந்தது. இதுவரை 11 ஆயிரத்து 613 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Tags:    

Similar News