செய்திகள்
திருவெண்ணெய்நல்லூர் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி
திருவெண்ணெய்நல்லூர் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசூர்:
திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி மனைவி பஞ்சவர்ணம் (வயது 74). இவர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் மலட்டாறு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பஞ்சவர்ணம் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.