தமிழ்நாடு
வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த மனநோயாளி
திருவையாறு அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த மனநோயாளியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே அம்மன்பேட்டை மூப்பனார் தெருவை சார்ந்தவர் கருணாநிதி மகன் சந்திரசேகர் (வயது 38). திருமணமாகாமல் தனியாக வசித்து வந்தார். மனநிலை பாதிக்கப்ட்டவர்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக இவரது வீட்டுக் கதவு திறக்கப்படாமல் துர்நாற்றம் அடிப்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர் நடுக்காவேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், ஞானமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டை உடைத்து பார்த்தனர்.
அங்கு உடல் அழுகிய நிலையில் சந்திரசேகர் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோத-னைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.