செய்திகள்
முதுகலை ஆசிரியர் தேர்வு: வயது வரம்பு கடந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சலுகை- அமைச்சர் அன்பில் மகேஷ்
மழலையர்கள் வகுப்புகள் தொடங்குவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9 முதல் 10-ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நீண்ட நாட்கள் பள்ளிக்கு செல்லாத காரணத்தால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்படும் அபாயம் உள்ளதாக கருதப்படுவதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வருகிற 1-ந்தேதியில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி வருகிற 1-ந்தேதி (நவம்பர்) முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ‘‘மழலையர்கள் வகுப்புகளை திறப்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான வயது வரம்பு கடந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்’’ என்றார்.