ஆன்மிகம்
நாகூர் நூர்ஷா தைக்கால் கந்தூரி விழா
நாகையை அடுத்த நாகூரில் நூர்ஷா சாஹிப் ஒலியுல்லாஹ் தைக்காலில் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகையை அடுத்த நாகூரில் நூர்ஷா சாஹிப் ஒலியுல்லாஹ் தைக்கால் உள்ளது. இந்த தைக்காலில் ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மாலை 6.30 மணிக்கு தைக்கால் டிரஸ்டி உபைத்துர் ரஹ்மான் சாஹிப் துவா ஓதிய பிறகு கொடியேற்றப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி வருகிற 26-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் நாகூர் போலீசார் ஈடுபட்டனர்.
மாலை 6.30 மணிக்கு தைக்கால் டிரஸ்டி உபைத்துர் ரஹ்மான் சாஹிப் துவா ஓதிய பிறகு கொடியேற்றப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி வருகிற 26-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் நாகூர் போலீசார் ஈடுபட்டனர்.