தொழில்நுட்பம்
விரைவில் அறிமுகமாகும் இரு சாம்சங் சாதனங்கள்
சாம்சங் நிறுவனத்தின் இரண்டு புதிய சாதனங்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சம்சங் நிறுவனம் கேலக்ஸி 01எஸ் மற்றும் கேலக்ஸி வாட்ச் 3 சாதனங்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இரு சாதனங்களும் இந்திய தரத்தை பூர்த்தி செய்வதற்கான சான்றினை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி வாட்ச் 3 ஸ்மார்ட்வாட்ச் 41எம்எம் மற்றும் 45எம்எம் என இருவித அளவுகளில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதவிர கேலக்ஸி வாட்ச் 3 டைசன் ஒஎஸ் 5.5 இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் இதில் சுழலக்கூடிய பெசல், மெல்லிய வடிவமைப்பு மற்றும் பெரிய ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய வாட்ச் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது.
கேலக்ஸி 01எஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் எதுவும் பிஐஎஸ் வலைதளத்தில் வெளியாகவில்லை. எனினும், முந்தைய தகவல்களின் படி கேலக்ஸி 01எஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம், 3ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.