செய்திகள்
இந்தி மொழி

இந்தி படிக்க விருப்பமா?- மாநகராட்சி பள்ளியில் கேள்வி

Published On 2020-08-19 08:27 GMT   |   Update On 2020-08-19 08:27 GMT
கோவை மாநகராட்சி பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை படிவத்தில் இடம்பெற்ற கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.
கோவை:

கோவை மாநகராட்சி பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என விண்ணப்பத்தில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில் இந்தி பற்றி பள்ளி விண்ணப்பத்தில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

3வது மொழியாக இந்தி கற்க விருப்பமா? அல்லது கைத்தொழில் ஒன்றை அதிகப்படியாக கற்க விருப்பமா? என்ற கேட்கப்பட்டுள்ளது.

முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை படிவத்தில் இடம்பெற்ற கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.
Tags:    

Similar News