செய்திகள்
கைது

திருவையாறு அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2021-06-08 09:34 GMT   |   Update On 2021-06-08 09:34 GMT
திருவையாறு அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவையாறு:

திருவையாறு அடுத்த அளிசகுடியை சேர்ந்த மூர்த்தி மகன் விவேக் (வயது 19), கண்டமங்கலத்தை சேர்ந்த ரவி மகன் வினோத் (17) இவர்கள் ஆகிய இருவரும் அம்பதுமேல்நகரம் சுடுகாடு அருகே கஞ்சா பொட்டலங்கள் விற்றுக் கொண்டிருப்பதாக வந்த தகவலின்பேரில் நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கேசவமூர்த்தி, ஏட்டுக்கள் ஜெகன், வரதராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவேக், வினோத் ஆகிய இருவரையும் பிடித்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News