செய்திகள்
கொரோனாவுக்கு பலி

மத்தியபிரதேசத்தில் 2 தடுப்பூசி போட்டவர் கொரோனாவுக்கு பலி

Published On 2021-11-17 02:06 GMT   |   Update On 2021-11-17 02:06 GMT
மத்தியபிரதேசத்தில் இந்தூர் மாவட்டத்தில் 4½ மாத காலத்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தூர் :

கொரோனாவுக்கு எதிராக 2 தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்களுக்கு, அந்த வைரஸ் தொற்று தாக்கினாலும் பெரும்பாலும் பாதிப்பு கடுமையாக இருக்காது, மரணம் நேரிடாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் 69 வயதான ஒருவர், 2 தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையிலும், கொரோனா தொற்றுக்கு ஆளானார்.

இவர் இந்தூர் மனோரமா ராஜே டி.பி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் மரணம் அடைந்தார். இதை மாவட்ட தொடர்பு அதிகாரி டாக்டர் அமித் மலாக்கர் உறுதி செய்தார். உயிரிழந்தவர், நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

4½ மாத காலத்தில் இந்தூர் மாவட்டத்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறை.
Tags:    

Similar News