செய்திகள்
குஜராத்தில் பிரதமர் மோடி பாதுகாப்பு பணிக்கு வந்த 23 போலீசாருக்கு கொரோனா
குஜராத்தில் பிரதமர் மோடி பாதுகாப்பு பணிக்கு வந்த 23 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
காந்திநகர்:
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றார்.
பிரதமரின் வருகை காரணமாக பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு நேற்றுமுன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 23 போலீசாருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றார்.
பிரதமரின் வருகை காரணமாக பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு நேற்றுமுன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 23 போலீசாருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.