செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

கேரளாவில் இன்று புதிதாக 2,938 பேருக்கு கொரோனா: 16 பேர் பலி

Published On 2021-03-02 14:02 GMT   |   Update On 2021-03-02 14:02 GMT
கேரளாவில் இன்று புதிதாக 2,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘கேரளாவில் இன்று புதிதாக 2,938 பேர் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,512 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 10,12,484 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 47,277 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,226 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,63,987 ஆகும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News