செய்திகள்
வாக்குப்பதிவு

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2019-12-07 01:45 GMT   |   Update On 2019-12-07 01:47 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டசபையின் 20 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ம் தேதி முதல் 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 30-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இங்கு ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்  கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டசபையின் 20 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியளவில் நிறைவடையும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குகளை எண்ணும் பணி டிசம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது.
Tags:    

Similar News