செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவிற்கு குடியுரிமை சட்டம் குறித்து பேச உரிமையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2019-12-13 18:03 GMT   |   Update On 2019-12-13 18:03 GMT
திமுகவிற்கு குடியுரிமை சட்டம் குறித்து பேச உரிமையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை:

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

குடியுரிமை மசோதாவால் சிறுபான்மையினர்களுக்கு பூஜ்ஜியம் சதவீதம் கூட பாதிப்பில்லை என உள்துறை மந்திரி கூறியதன் அடிப்படையிலேயே மசோதாவுக்கு ஆதரவு அளித்தோம். 2 லட்சம் இலங்கை தமிழர்கள் அகதியானதற்கு காரணமான திமுகவிற்கு குடியுரிமை சட்டம் குறித்து பேச உரிமையில்லை.

சட்டமன்ற தேர்தலைக்கூட திமுக சந்திக்குமா என்ற சந்தேகம் உள்ளது. மக்களை சந்திக்காமல் உள்ளாட்சித்தேர்தலை தள்ளிவைக்கும் எண்ணத்திலேயே திமுக உள்ளது. ஆன் லைன் லாட்டரி சீட்டுகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். உழைப்பே உயர்வு தரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News