வழிபாடு
திருவண்ணாமலையில் பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) காலை 8.15 மணிக்கு தொடங்கி மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.22 மணிக்கு நிறைவடைகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள். பவுர்ணமி நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) காலை 8.15 மணிக்கு தொடங்கி மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.22 மணிக்கு நிறைவடைகிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் மலை சுற்றும் பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு அனுமதி கிடையாது. இதன் காரணமாக திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) காலை 8.15 மணிக்கு தொடங்கி மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.22 மணிக்கு நிறைவடைகிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் மலை சுற்றும் பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு அனுமதி கிடையாது. இதன் காரணமாக திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம்.
தமிழக அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டு உள்ள இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம்...திருமணம் கைகூடச் செய்யும் ஆண்டாள் கடைபிடித்த விரதம்