தமிழ்நாடு
சென்னை வானிலை ஆய்வு மையம்

தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

Published On 2022-04-15 21:42 GMT   |   Update On 2022-04-15 21:42 GMT
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், சில இடங்களில் மழை பெய்துள்ளது.
சென்னை:

வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், நாளை மறுதினமும் (திங்கட்கிழமை), 19-ந்தேதியும் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News