லைஃப்ஸ்டைல்
ரச வடை

சூப்பரான ஸ்நாக்ஸ் ரச வடை செய்யலாம் வாங்க...

Published On 2021-10-12 09:30 GMT   |   Update On 2021-10-12 09:30 GMT
வீட்டில் ரசம் மீந்து விட்டால் கவலைப்படாதீங்க. சூடான வடை செய்து அதை ரசத்தில் ஊற வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கடலைப் பருப்பு - 2 கப்
உளுந்தம் பருப்பு - 1 கப்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 2
ப.மிளகாய் - 1

ரசத்திற்கு :

நீர் - தேவையான அளவு
மிளகாய்தூள் - 1 மேஜைக்கரண்டி
மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புளி - 3 தேக்கரண்டி
பூண்டு - 6 பற்கள்
பெருங்காயப் பொடி - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லிதழை - சிறிதளவு

செய்முறை :

வடை செய்ய :

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு அதனை வடிகட்டி மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். தண்ணீர் அதிகம் சேர்க்க கூடாது.

அரைத்த மாவில் உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாயை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை உருண்டைகளாக பிடித்து போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

ரசம் செய்ய :

பூண்டை நசுக்கிக்கொள்ளவும்.

கொத்தமல்லிதழை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் மிளகாய் தூள், உப்பு, மல்லித் தூள், நசுக்கிய பூண்டு, புளி, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பின்பு புளியை தண்ணீரில் கரைக்கவும். நன்றாக கரைத்த பின்னர் புளி கோதல் மற்றும் பூண்டின் தோலை வெளியேற்றி விடவும். மீண்டும் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

பின்பு கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். தாளிக்க வேண்டிய அவசியமில்லை.

பின்பு வடையை அதில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து பரிமாறும் போது கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

மழைக்கு சூப்பரான ரச வடை ரெடி.

பழைய ரசம் இருந்தாலும் அதையும் பயன்படுத்தலாம்.
Tags:    

Similar News