செய்திகள்
விஷம் குடித்து பெண் தற்கொலை

குள்ளனம்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2021-10-11 13:50 GMT   |   Update On 2021-10-11 13:50 GMT
குள்ளனம்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே அனுமந்தநகர் சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் இலியாஸ்கான். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஷாஸ்மின் பானு (வயது 33). இவர்களுக்கு சாகித்கான் (13) என்ற மகனும், சமிதா லைலா (5) மகளும் உள்ளனர். இந்த நிலையில் இலியாஸ்கானுக்கு வேலை கிடைக்காததால் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் ஷாஸ்மின் பானு மகளிர் சுய உதவிக்குழுவில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 7-ந்தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாஸ்மின் பானு நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News