செய்திகள்
மரணம்

கோவை அருகே மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த விவசாயி கிணற்றில் மூழ்கி பலி

Published On 2021-04-28 10:43 GMT   |   Update On 2021-04-28 10:43 GMT
கோவை அருகே மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த விவசாயி கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருமத்தம்பட்டி:

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மான்டம்பாளையம் புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). விவசாயி.சம்பவத்தன்று இவர் தனது தோட்டத்தில் இருந்த போது அவரது மகன் தனக்கு நீச்சல் கற்றுக் கொடுக்குமாறு கூறினார். இதனையடுத்து செந்தில்குமார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்ட அவர் நீரில் மூழ்கினார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மகன் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கிணற்றில் குதித்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். பின்னர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News